உள்நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்தாக ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு மருத்துவருக்கு மரண தண்டனையும் மற்றுமொரு அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்ததாகவும், உளவு பார்த்ததாகவும் ஒரு மருத்துவர் மற்றும் 2 ராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த ராணுவ நீதிமன்றம் ஜாவித் இக்பால் என்ற ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும், ராஜா ரிஸ்வான் என்ற அதிகாரி மற்றும் வாசிம் அக்ரம் என்ற மருத்துவருக்கும் மரண தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
0 Comments