Tamil Sanjikai

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 22 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஜெய்ப்பூரில் சந்தித்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்தது. தமிழகம் தரப்பில் கே.விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 48 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் (75 ரன்), பாபா அபராஜித் (52 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்..

முதல் நாளில் மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக 6 லீக் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதில் மும்பை-சவுராஷ்டிரா (ஏ பிரிவு), டெல்லி-விதர்பா (பி பிரிவு) ஆகிய ஆட்டங்களும் அடங்கும்.

0 Comments

Write A Comment