Tamil Sanjikai

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவடைந்தது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்கள், ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்கிசை ஆடி வரும் வரும் தென்னாப்பிரிக்கா அணி இன்றைய ஆட்ட நேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. எல்கர் 27, பவுமா 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 463 ரன்கள் தென்னாப்பிரிக்கா பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment