Tamil Sanjikai

விவசாயிகளின் என்ன தான் வியர்வை சிந்த பாடுபட்டாலும் அவர்களின் வருமானம் என்பது மிக குறைவு தான், அனைவருக்கும் சோறு போடும் விவசாயி சோறு இல்லாமல் சாகும் கொடுமை நம் நாட்டில் தினம்தோறும் நாடாகும் சம்பவங்களில் ஓன்று. இதை சரி செய்ய, விவசாயிகளின் வருமானம் பெருக தமிழக அரசு இயற்றிய வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம், சேவைகள் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய உற்பத்தியை பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும், அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி போன்ற விவசாயிகள் சந்திக்கும் பாதிப்பை தடுக்கவும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஒப்பந்த பண்ணையச் சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர விதிகளை வகுத்து செயலாக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment