சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இந்த பணம் குஜராத்தை சேர்ந்த சேத்தன் பாய் என்பவருக்கு சொந்தமான பணம் என்றும் ஹவாலா முறையில் இதனை சட்டவிரோதமாக கைமாற்ற அந்த பணம் கொண்டு செல்வதாகவும் பிடிபட்டவர்கள் தெரிவித்தனர். இவர்களுக்கு இதற்காக மாத ஊதியம் மற்றும் கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும், பணம் எண்ணும் எந்திரம் கைப்பற்றப்பட்டது.
0 Comments