Tamil Sanjikai

முதலமைச்சர் பழனிசாமி அரசு முறைப் பயணமாக இன்று இங்கிலாந்து புறப்பட்டார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி . இன்று காலை சென்னை இல்லத்தில் இருந்து விமான நிலையம் சென்ற முதலமைச்சருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்னர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டார்.

லண்டனை சென்றடையும் முதலமைச்சர், சுகாதாரத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பின்னர் செப்.1ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2ஆம் தேதி அமெரிக்கா சென்றடைகிறார். அங்கு தமிழக தொழில் முனைவோர் பிரதிநிதிகளுடனும், அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுகிறார்.

செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் துபாய் சுற்றுபயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் அங்கு நடைபெறும் தொழில் முனைவோர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து 10ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

0 Comments

Write A Comment